Monday, October 25, 2010

Ohh... Butterfly!


வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி தொடங்கினால்
உற்சாகம் கூடிப் போகும் உன்னில்.

அதைப் பற்றிய தகவல்களை
எவ்வளவு சொன்னாலும் கேட்பாய்.
சமயங்களில் நான் தெரியாத
அரிய தகவல்களைச் சொல்வாய்

வயல்வெளிகளின் பசுமையில்
வண்ணத்துப்பூச்சி பிடிப்பதாய் வரும் கனவு
உனக்குப் பிடித்ததென்பாய்.

இரு சிறகுகள் கிடைத்தால்
அதன் கூட்டத்திற்கே ராணியாவேன்
என்றபடி சிரிப்பாய்.

நீண்ட நாட்களுக்குப் பிறகான ஒரு சந்திப்பில்
உன் வண்ணத்துப்பூச்சி கனவுகள்
குறித்துக் கேட்ட பொழுது
விரக்தியாய் புன்னகைத்தபடி
நெடுஞ்சாலைப் பயணங்களில்
வண்ணத்துப்பூச்சிகள் பொருட்டல்ல என்றாய்.



No comments:

Post a Comment