Tuesday, June 12, 2012
நான் எனும் நீ...........
போராளிகளே புறப்படுங்கள்
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இறைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது
அன்றுதான்
போராட்டம் எனும் நமது
இருண்ட குகைக்குள்
வெற்றிச் சூரியனின்
வெண்கதிர்கள் நுழைகின்றன
என்பதை நீ மறந்து விடவும் கூடாது
உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை
நீ எப்போதும் மறந்திடாதே!
தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லை என்பதனை
நான்
சொல்லித்தரவில்லையா?
என்னை அதற்காய் நீ
மன்னித்து விடுவாயாக.
நாம் அல்லாஹ்வின் பாதையில்
நடந்து வந்தவர்கள்
நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில்
நடக்க இருப்பவர்கள்
இந்தப் போராட்டத்தில்
சூடுண்டாலும், வெட்டுண்டாலும்
சுகமெல்லாம் ஒன்றேதான்
நமது போராளிகள்
யாரும் மரணிக்கப்போவதில்லை!
போராளிகளே புறப்படுங்கள்
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வேடுக்க நேரமில்லை
இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில்
உங்கள் நேரத்தை வீனாக்க வேண்டாம்
தண்ணீரும் தேவையில்லை
பன்னீரும் தேவையில்லை
உங்கள் தலைவனின் உடலில்
இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?
அது அவனின் மண்ணறையில்
சதா மணம் வீச வேண்டுமெனில்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்
இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால்
கடைசி நேரத்தில் தலைமைத்துவக்
கட்டுப்பாட்டை மீறாதீர்கள்
கண்ணீர் அஞ்சலிகள் போதும்
கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்
இரத்தத்தால் தோய்ந்திருக்கும்
எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள்
வேண்டுமெனில் எனது “இஹ்ராம்”
துண்டுகளை
அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்
எனது உடலில் இருந்து பொசிந்து வரும்
இரத்தச் சொட்டுக்கள், அவற்றை தழுவும்
பசியுடன் இருப்பதைப் பாருங்கள்
எனது மூக்குக்குள்ளும்
எனது காதுகளுக்குள்ளும்
பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத்
தோற்றத்தை
பழுதாக்கி விடாதீர்கள்
சில வேலைகளில் உங்களை நான்
சுவாசிக்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
கேட்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
பேசாமலும் இருந்திருக்கின்றேன்
குருடர்களாகவும்
செவிடர்களாகவும்
ஊமையர்களாகவும் இல்லாதவர்களால்
இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது
கபுறுக் குழிக்குள்ளாவது
என்னை சுவாசிக்க அனுமதியுங்கள்
ஹ_ர்லீன்களின் மெல்லிசைகளை
கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்
தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும்
சுனக்கவும் தேவையில்லை.
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்
ஓரத்தில் நின்றுகொண்டு
ஓயாமல் தர்க்கம் செய்யும்
வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி
கருத்து வேறுபாடென்னும்
கறையான்கள் வந்துங்கள்
புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும்
புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்
வேகத்தைக் குறைக்காமல்
வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்
ஆலமரமாய்
ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம்
வாழவேண்டும் - அதை
வாழ்விற்கப் புறப்படுங்கள்
எனது பணி இனிது மடிந்தது
உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப்
புறப்படுங்கள்
அவனின் நாட்டத்தை
இவனின் துப்பாக்கி ரவைகள்
பணிந்து தலைசாய்நது
நிறைவேற்றியுள்ளன.
விக்கி அழுது
வீனாக நேரத்தை ஓட்ட வேண்டாம்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்
Wednesday, March 28, 2012
Saturday, March 17, 2012
சிநேகிதிகளின் கணவர்கள்...
-மனுஷ்யபுத்திரன்-
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்
ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்
ஒரு சர்க்கஸ் கோமாளியின்
அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேதிகளின் கண்களை
முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்
அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை
மறுதலித்துவிடுகிறேன்
அவளைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்
அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை
அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை
சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு
காட்டப்படும் பெருந்தன்மை
நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும்
பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறாள்
உரையாடல்களின்
அபாயகரமான திருப்பங்களை
பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்
எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்
ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களின் இடையே இருப்பது
ஒரு உறவல்ல
இலக்குகள் ஏதுமற்ற
ஒரு பந்தயம்
ஒரு அன்னியனுக்குக் காட்டும்
வன்மம் மிகுந்த மரியாதை
ஒரு சட்டபூர்வ உரிமையாளனுக்கு எதிராக
ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்
தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட
ஒரு மீன் முள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை
மாற்றிக் கொள்கிறேன்
அவர்களது எல்லா அக்கறைகளையும்
எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்
சிநேகிதிகளுடன் பேச
ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது
அவர்களின் கணவர்களுடன் பேச
ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
சிநேகிதிக்குப் பதில்
சிநேகிதியின் குழந்தைகளை
நேசிக்கக் கற்றுக் கொண்டேன்
எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்
எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்
நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று
அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை
'சிஸ்டர்' என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று,
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்
ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்
ஒரு சர்க்கஸ் கோமாளியின்
அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேதிகளின் கண்களை
முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்
அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை
மறுதலித்துவிடுகிறேன்
அவளைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்
அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை
அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை
சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு
காட்டப்படும் பெருந்தன்மை
நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும்
பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறாள்
உரையாடல்களின்
அபாயகரமான திருப்பங்களை
பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்
எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்
ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களின் இடையே இருப்பது
ஒரு உறவல்ல
இலக்குகள் ஏதுமற்ற
ஒரு பந்தயம்
ஒரு அன்னியனுக்குக் காட்டும்
வன்மம் மிகுந்த மரியாதை
ஒரு சட்டபூர்வ உரிமையாளனுக்கு எதிராக
ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்
தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட
ஒரு மீன் முள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை
மாற்றிக் கொள்கிறேன்
அவர்களது எல்லா அக்கறைகளையும்
எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்
சிநேகிதிகளுடன் பேச
ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது
அவர்களின் கணவர்களுடன் பேச
ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
சிநேகிதிக்குப் பதில்
சிநேகிதியின் குழந்தைகளை
நேசிக்கக் கற்றுக் கொண்டேன்
எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்
எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்
நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று
அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை
'சிஸ்டர்' என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று,
Thursday, February 23, 2012
மௌன பூகம்பம்
அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்
பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில்
நிலையத்தில்.
எப்போதெனில்..
எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.
எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..
ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.
அப்பொழுது-
மனசில் எத்தனை
மௌன பூகம்பம்!
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு
விட்டன
கண்கள்.
நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?
மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.
இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே
வருகிறது.
ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்மார்பு தடவும்
அதே
பார்வை..
அதே நீ!
அதே நீ!
என் பழையவளே!
என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!
உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?
அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?
உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க
மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!
ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ
அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.
உன்
சிவப்பில்
கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய
பழச்சிவப்பு.
இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?
வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து
போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?
உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப்
போலவே
விழித்திருக்கின்றன.
ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம்
சொல்கிறதே!
வேண்டாம்!
விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின்
உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!
இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப்
போகிறது.
போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை
விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.
அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!
"நீயும் என்னைக்
காதலித்தாயா?"
--வைரமுத்து--
Thursday, July 21, 2011
யமுனாவின் வருத்தம்
அழகற்றவளென
நீண்ட காலமாக
அறியப்படுகிறாள் யமுனா
அவள் அழகற்றவளென
அறிந்துகொண்டதுதான்பிறகு அவளது எலலா நினைவுகளோடும்
அது நிழல்போல வந்துகொண்டே இருக்கிறது
எல்லா வரிசைகளிலும்
நாம் ஏன் கடைசியில் நிற்கிறோமென
அடிக்கடி யோசிக்கிறாள் யமுனா
அவளது வேலைக்கான நேர்முகங்கள்
ஒரு நிமிடத்தில் முடிவடைந்துவிடுகின்றனஅவளது அன்பிற்கான விண்ணப்பங்கள்மீது
உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட்டு விடுகின்றன
நிறையக் கற்றுக் கொள்கிறாள் யமுனா
இத்தோடு ஐந்து பாஷைகள் தெரியும் அவளுக்கு
அதில் ஒன்று கிளிகளின் பாஷை
இரண்டு மொழிகளில் கவிதைகள் எழுதுகிறாள்
பார்த்ததைப் பார்த்ததுபோலவே படங்களும் எழுதுவாள்
பேச்சுப்போட்டியில் அவள்தான் எப்போதும் முதல்
ஓட்டபபந்தயத்தில் ஒருபோதும்
அவள் பின் தங்கியதே இல்லை
சிறு சிறு வித்தைகள் எவ்வளவோ தெரியும்
அஞ்சல் வழியில்
இப்போது மூன்றாவது எம்.ஏ. படிக்கிறாள்
தன்னம்பிக்கை மிக்கவளாக
வாழ்கிறாள் யமுனா
தன் மார்பகங்களை உற்றுப் பார்ப்பவர்களைப்பற்றியே
அவள் எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பதில்லை
இருள் வழிகளுக்கு எப்போதும் அவள் அஞ்சுவதில்லை
தனித்து நடக்கையில் ஓசைகளை
உற்றுக் கேட்பதில்லை
கண்ணாடியில் அதிக நேரம்
அவளுக்குத் தேவைப்படுவதில்லை
யமுனாவின் எந்த வழியிலும்
குறுக்கு வழிகள் எதிர்ப்படுவது இல்லை
எதுவும் அவளுக்கு
இலவசமாகத் தரப்படுவதில்லை
யாரும் அவளுக்கு
சலுகைகள் ஏதும் காட்டுவதில்லை
எந்தப் பொய்ச் சத்தியங்களும்
அவளிடம் செய்யப்படுவதில்லை
தான் முத்தமிடப்படும்போது
தன் முகம் பார்க்கப்படுவதில்லை
என்பதை அறிவாள் யமுனா
உண்மையில் முத்தமிடப்படுவது
தான்தானா என்கிற குழப்பம் அவளைப் பதட்டமடையவைக்கிறது
உள்ளத்தின் அழகைப் பற்றி சொல்லப்படும் பொய்கள்அவளைக் கசப்படையச் செய்கின்றன
அதைவிட நேர்மையானவை
தனக்குப் பொருந்தாத ஆடைகளும்
போலி அழகு சாதனப் பொருள்களும்
என்றவள் நம்புகிறாள்
அழகிய பெண்களை
மிகவும் நேசிக்கிறாள் யமுனா
இந்த உலகம் அவர்களுடையது என்பதில்
அவளுக்குப் புகார்கள் ஏதுமில்லை
அழகானவை அனைத்தும் தம் பிரகாசத்திற்கு
அழகற்றதையே பெரிதும் சார்ந்திருக்கின்றனஎன்பதில் அவளுக்கு
ஒரு ரகசியப் பெருமிதமும் உணடு
யமுனாவுக்கு எப்போதும் இருக்கும்
ஒரே வருத்தம்
ஜானகிராமன்
யமுனாவுக்கு
வேறு பெயர் வைத்திருக்கலாம் என்பதுதான்
-மனுஷ்ய புத்திரன்-
Friday, June 10, 2011
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - A Meaningful Song
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்
உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்க சொல்வேன்
அதில் பிழைக்க சொல்வேன்
அவர் உரிமை பொருள்களை தொட மாட்டேன்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்
உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானம் இல்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்
ஒரு காலம் வரும் என் கடமை வரும்
இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புது பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்
உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
முன்பு இயேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அன்டக் மேலோர் சொன்னதை மறந்தார்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்
உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்
Thursday, June 2, 2011
BEWARE OF RUBBER HAIR BANDS and SLIPPERS from China!!!
Be cautious of hair bands at open markets around the city too “ they are probably from China since they are purchased in bulk very very cheap !!!!
Take a good look before buying hair bands in future “ especially the following kind..
These slippers are already available in the Sri Lankan Market.
See the experience below;
Beware of these cheap imports from china such as clothes, food, toys, slippers and even glasses because the Chinese are using some strong but cheap chemical in their manufacturing process. Cheap is becoming expensive and at the same time fatal. PLEASE DO NOT HESITATE TO PASS THIS MESSAGE TO EVERYONE
Take a good look before buying hair bands in future “ especially the following kind..
These Hair bands were made from used condoms and threads.
BEIJING (AFP) - Used condoms are being recycled into hair bands in southern China threatening to spread sexually-transmittable diseases they were originally meant to prevent, state media reported Tuesday
In the latest example of potentially harmful Chinese-made products, rubber hair bands have been found in local markets and beauty salons in Dongguan and Guangzhou cities in southern Guangdong province, China Daily newspaper said.
'These cheap and colorful rubber bands and hair ties sell well ..... threatening the health of local people,' it said.. Despite being recycled, the hair bands could still contain bacteria and viruses, it said.
'People could be infected with AIDS, (genital) warts or other diseases if they hold the rubber bands or strings in their mouths while waving their hair into plaits or buns,' the paper quoted a local dermatologist who gave only his surname, Dong, as saying. A bag of ten of the recycled bands sells for just Rs.5, much cheaper than others on the market, accounting for their popularity, the paper said.
A government official was quoted as saying recycling condoms was illegal. China 's manufacturing industry has been repeatedly tarnished this year by a string of scandals involving shoddy or dangerous goods made for both domestic and foreign markets.
In response, it launched a public relations blitz this summer aimed at playing up efforts to strengthen monitoring systems.
Check your kids hair bands and make sure they do not put them in their mouth while trying to plait or tie their hair .
See below for Chinese Slippers now being sold in Walmart in the US.
These slippers are already available in the Sri Lankan Market.
See the experience below;
Beware of these cheap imports from china such as clothes, food, toys, slippers and even glasses because the Chinese are using some strong but cheap chemical in their manufacturing process. Cheap is becoming expensive and at the same time fatal. PLEASE DO NOT HESITATE TO PASS THIS MESSAGE TO EVERYONE
Wednesday, March 2, 2011
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
இதற்குத்தானா?
பார்க்காமலே
இருந்திருக்கலாம்
பார்த்தும்
பாராததுபோல் போயிருக்கலாம்
பார்க்க வந்தது
உன்னயல்ல என்று சொல்லியிருக்கலாம்
பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்
பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு துரம் வந்தது?
அங்கேயே
இன்று உனக்குத் தர
என்னிடம்
எதுவுமே இல்லையென்று
உனக்கும் தெரியும்
இருந்தும் அங்கேயே
பிடிவாதமாக அமர்ந்திருக்கிறாய்
என்னைவிடவும் அதிகமாக
அதை மறைத்துக்கொண்டு
எப்போதையும்விட அதிகமாக
அதை மன்னித்துக்கொண்டு
புகார்
இதையெல்லாம்
ஒரு புகாராகச் சொல்ல
எனக்கும்
அவமானமாகத்தான் இருக்கிறது
என்னைப் பற்றி
சொல்லிக் கொள்ள
எனக்கு அந்த ஒரு வழிதான்
இருக்கிறது
மழையில் ஒருத்தி
மழையில் ஒருத்தி
ஈரத் தலையைத் துவட்டுகிறாள்
ஈர ஆடையைப் பிழிகிறாள்
ஈரக் குடையை உதறுகிறாள்
ஈரக் கைகளைத் தேய்த்துக் கொள்கிறாள்
ஈரத்தைத் தாண்டிக் குதிக்கிறாள்
ஈரத்திலிருந்து ஒதுங்கி நிற்கிறாள்
தான் தான்
இந்த மழையை
ஈரமாக்குகிறோம்
என்றுணர்ந்த ஒரு கணத்தில்
சிரித்துக்கொண்டே
மறுபடியும்
மழையில் இறங்கி நடந்து போகிறாள்
புறப்பாடு
அந்தி கூடியதும்
நல்ல வெந்நீரில் குளிக்கிறாள்
தலையை அவ்வளவு நேர்த்தியாக
வாரிக்கொள்கிறாள்
ஆழ்ந்த லயிப்புடன் ஒப்பனையிட்டு
முகத்தை திருத்தமாக நேர் செய்கிறாள்
முக்கியமான தினங்களில்
மனமுவந்து ஏற்கும் ஆடையையே
மீண்டும் தேர்வு செய்கிறாள்
அவளது மன நிலையினை
சற்றே இடம் மாற்றும்
அந்த வாசனை திரவியத்தை
தெளித்துக் கொள்கிறாள்
ஆபரணங்களைக் கவனமாக
அணிந்துகொள்கிறாள்
சமையலறையில் அடுப்பை அணைத்துவிட்டோமா
எலலாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டோமா
என்று சரிபார்த்துக்கொள்கிறாள்
பிறகு
கண்ணாடியில் சற்றே
தன்னை உற்றுப் பார்க்கிறாள்
அவளை
அவளுக்கு
அவ்வளவு பிடித்திருக்கிறது
இனி
அவள் செய்வதற்கு
அங்கே ஒன்றுமே இல்லை
எல்லாம் செய்யப்பட்டு விட்டது
எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டுவிட்டது
நேரமாகிவிட்டதா என
கடிகாரத்தைப் பதற்றத்துடன் பார்த்தபடி
காலணிகளைத் தேடுகிறாள்
சட்டென ஒரு கணம்
எதையோ நினைக்கிறாள்
அலமாரியைத் திறந்து
ஒரு சிறிய மாத்திரையை எடுக்கிறாள்
படுக்கைக்குச் சென்று
அமைதியாக நித்திரையில்
ஆழ்கிறாள்
ஒரு பாதை, ஒரு பிரார்த்தனை
இருப்பதிலேயே
கடினமான பாதையைத்
தேர்வு செய்கிறேன்
இந்தப் பயணம் எந்தவிதத்திலும்
இலகுவாகிவிடக் கூடாது என்பதற்காக
கண்ணீர் மல்க
பிரார்த்தனை செய்கிறேன்
இவ்வளவு பிரயாசையுடன்
உன்னைத் தேடி வரும் நாளில்
நீ அங்கே இருக்கக் கூடாது என்பதற்காக
வேறெப்படியும்
நான் அனாவசியமாக
ஒரு வெறுப்பைக் காட்டுகிறேன்
சம்பந்தமில்லாமல்
ஒரு உதாசீனத்தைக் காட்டுகிறேன்
வேறெப்படியும்
இந்த இடத்தைவிட்டுப்
போக முடியாது
சார்தல்
எனக்கு
வேண்டியதனைத்தையும்
நானே
ஒழுங்குபடுத்திக் கொள்கிறேன்
இந்த மாத்திரைகளை மட்டும்
யாராவது
எடுத்துத் தரவேண்டும்
இனி
யாரையும்
விரும்பவில்லை
இனி
யாரோடும்
இருக்கலாம்
அறியும் வழி
உன்னைப் பற்றிக் கொள்ளவே
முடியாதென
புரிந்த நாளில்தான்
எனக்குத் தெரிந்தது
இவ்வளவு நாளும்
உன்னை
எவ்வளவு
பற்றிக்கொண்டிருந்தேன்
என்பது
இழக்கவே முடியாதது
எதுவெனத் தெரிந்துகொள்ள
அதை
இவ்வளவு
இழக்க வேண்டுமா?
யாருக்குமே
இவ்வளவு
அழகாக இருந்தால்
யாருக்குமே
வெறுக்கத்தான் தோன்றும்
திரும்பும்போதும்
நீண்ட படிக்கட்டுகளில்
இறங்கிச் செல்கிறேன்
நான் வரும்போது
இங்கே
இத்தனை படிகள்
இருக்கவே இல்லை
இப்போதுதான் தெரியும்

இந்தப் பின்னிரவில்
இத்தனை தனியாக
வீடு திரும்பும்போதுதான்
தெரிகிறது
என்னைப் பற்றி
நினைத்துக் கொள்ள
எனக்கு
இவ்வளவு
இருக்கிறது என்று
நடனம் மூன்று குறிப்புகள்
1
நடனமாடுபவர்களுக்கும்
நடனத்திற்கு கைதட்டுபவர்களுக்கும் இடையே
நடனம்
தனியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது
2
நடன மங்கை
ஆட அழைக்கும் ஒவ்வொரு கரத்தையும்
புன்னகையுடன் மறுதலிக்கிறாள்
பிறகு நடனத்தை தொடர்கிறாள்
அங்கே இல்லவே இல்லாத
யாரோ ஒருவருடன்
3
மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறோம்
நமக்கு நடனமாடத் தெரியாது என்று சொல்ல
அங்கே யாருமே இல்லை
தேடல்
தவறாக அழைக்கப்பட்ட
தொலைபேசி எண்ணின்
மறுமுனையிலிருந்து
யாரோ ஒரு குழந்தை
அப்பா நீ எங்கேயிருக்கிறாய்
என திரும்பத் திரும்ப
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
நான்
அதன் அப்பா இல்லை
என சொல்லி முடிப்பதற்குள்
என் வீடுவரை
தேடி வந்துவிட்டது
கடைசியாக
ஒரு அன்பில்
கடைசியாக மிஞ்சுகிறது
ஒரு அன்பின் சின்னம்
மட்டும்
தடயம்
ஒரு அன்னிய இடத்தைப்
பயன்படுத்தும்போது
எல்லாவற்றையும்
நேர்த்தியாக கையாள்கிறோம்
எந்த சந்தேகமும் வராதபடி
எல்லாவற்றையும்
அதனதன் இடத்தில்
மறுபடி வைக்கிறோம்
ஒரு
ஈரத் துண்டை
என்ன செய்வதென்று மட்டும்
ஒருபோதும் தெரிவதில்லை
காலியிடங்கள்
பறவைகள் இறந்த பிறகு
காலி பறவைக் கூண்டுகள்
மீன்கள் இறந்த பிறகு
காலி மீன் தொட்டிகள்
வளர்ப்பு நாய்கள் இறந்த பிறகு
காலி நாய்ச் சங்கிலிகள்
தொட்டிச்செடிகள் அழுகிய பிறகு
காலித்தொட்டிகள்
மனிதர்கள் இறந்து போகிறார்கள்
மற்றெதையும் போல
அவ்வளவு தெளிவாக
இருப்பதில்லை
அது
வேறெப்போதும்
தனது முதல் பல் விழுவதை
உற்றுப் பார்க்கும் சிறுவன்
தனது ருதுவின் முதல் குருதியை
உக்கிரமாய் உணரும் சிறுமி
தனது முதல் நரையை பிடுங்கும்
ஒரு மனிதன்
தனது முதல் காதலை இழக்கும்
ஒரு தருணம்
வேறெப்போதும் அறியவில்லை
அவ்வளவு தூய தனிமையை
பரஸ்பரம்
பண்டிகைக்கு முதல் நாள்
குழந்தைக்கு புத்தாடை வாங்க
பணம் கேட்பவன்
குழந்தைக்கு உடல் நலமில்லை
எனப் பொய் சொல்கிறான்
கடவுள் அவனை
கொஞ்சம் மன்னிக்கிறார்
அவனும் கடவுளை
கொஞ்சம் மன்னிக்கிறான்
ஒன்றும் நிகழவில்லை
பண்டிகைகள் வந்து
பண்டிகைகள் போகின்றன
அதே இடத்தில்
அப்படியேதான்
இருந்துகொண்டிருக்கிறேன்
முதல் நினைவு
முதல்நாள் பள்ளிக்குப்
போகும் குழந்தை
எப்போது வீட்டுக்குப் போவோம்
என்பதையே
பனித்த கண்களுடன்
நினைத்துக்கொண்டிருக்கிறது
பிறகு
கற்றுக்கொண்ட அனைத்தையும்
அது மறந்துவிடுகிறது
வாழ்நாள் முழுக்க
இந்த ஒரு பழக்கத்தைத் தவிர
சாம்பல் நிறத் துயில்
அதிகாலையில்
பணியிலிருந்து திரும்பும் நங்கை
ஒரு சாம்பல் நிறப்
பொழுதினைப் பார்க்கிறாள்
ஒரு தேநீர்க் கோப்பையின்
சாம்பல் நிற ஆவியிலிருந்து
பிறக்கும் ஒரு உலகினைப் பார்க்கிறாள்
ஒரு பகலின் நொடியினைவிட
ஒரு இரவின் நொடி புதிர் மிகுந்தது
எங்கெங்கும்
ஏதோ ஒன்று துவங்குகையில்
எல்லாவற்றையும்
முடித்து வைப்பதற்கு மனமில்லாமல்
சாலையோரம் உதிர்ந்துகிடக்கும்
ஏதோ மலரைக் கையில் எடுக்கிறாள்
அது தன்னுடைய நாளின் மலரல்ல
என்று புன்னகையுடன்
திரும்ப வைக்கிறாள்
ஒரு பகலின் சாத்தியங்களைவிட
ஒரு இரவின் சாத்தியங்கள்
எல்லையற்றவை
எந்த ஒரு பகலையும்விட
ஒரு தூக்கமற்ற இரவு
அவளது புலன்களைப்
பிரகாசிக்க வைக்கிறது
புலர்ந்து வரும் பொழுதின்
ஒவ்வொரு கண் விழிப்பிற்கும்
ஒவ்வொரு மணியோசைக்கும்
தலை வணங்குகிறாள்
அவை வேறொரு உலகின் அழைப்பு
என்றுணரும்போது திடுக்கிடுகிறாள்
ஒரு பகலின் நினைவுகளைவிட
ஒரு இரவின் நினைவுகள்
கருணையற்றவை
சூரியனின் ஒரு கிரணத்தில் தொடங்கி
இன்னொரு கிரணத்தில் முடியும்
ஒரு வாழ்க்கையின்
புராதன சுழற்சியிலிருந்து
முற்றாக நீங்குகிறாள்
அது அவளது உடலை
எடையற்றதாக மாற்றுகிறது
அவளது மெல்லிய இமைகளைக்
கனத்துப்போகச் செய்கிறது
ஒரு பகலின் குரல் கேட்பதேயில்லை
ஒரு இரவின் குரலை மௌனமாக்கவே முடிவதில்லை
அணைத்துக் கொள்ள வேண்டும்
என்று விரும்புகிறாள்
தனியே
அதிகாலையின்
சாம்பல் நிறத் துயிலில்
வீழ்கிறாள்
ஆழமாக
வெகு ஆழமாக
ஒரு சாம்பல் நிறக் கனவு
காண்கிறாள்
ஒரு பகல் என்பது
ஒரு வேலை நேரம்
ஒரு இரவு என்பது
இன்னொரு வேலை நேரம்
அகல்
கார்த்திகை நாளில்
சின்னஞ் சிறுமகள்
ஒவ்வொரு அகல் விளக்காகத்
துடைத்து வைக்கிறாள்
என் இறந்த காலத்திற்கு
இனி நான் ஒருபோதும்
பார்க்காமலே
இருந்திருக்கலாம்
பார்த்தும்
பாராததுபோல் போயிருக்கலாம்
பார்க்க வந்தது
உன்னயல்ல என்று சொல்லியிருக்கலாம்
பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்
பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு துரம் வந்தது?
அங்கேயே
இன்று உனக்குத் தர
என்னிடம்
எதுவுமே இல்லையென்று
உனக்கும் தெரியும்
இருந்தும் அங்கேயே
பிடிவாதமாக அமர்ந்திருக்கிறாய்
என்னைவிடவும் அதிகமாக
அதை மறைத்துக்கொண்டு
எப்போதையும்விட அதிகமாக
அதை மன்னித்துக்கொண்டு
புகார்
இதையெல்லாம்
ஒரு புகாராகச் சொல்ல
எனக்கும்
அவமானமாகத்தான் இருக்கிறது
என்னைப் பற்றி
சொல்லிக் கொள்ள
எனக்கு அந்த ஒரு வழிதான்
இருக்கிறது
மழையில் ஒருத்தி
மழையில் ஒருத்தி
ஈரத் தலையைத் துவட்டுகிறாள்
ஈர ஆடையைப் பிழிகிறாள்
ஈரக் குடையை உதறுகிறாள்
ஈரக் கைகளைத் தேய்த்துக் கொள்கிறாள்
ஈரத்தைத் தாண்டிக் குதிக்கிறாள்
ஈரத்திலிருந்து ஒதுங்கி நிற்கிறாள்
தான் தான்
இந்த மழையை
ஈரமாக்குகிறோம்
என்றுணர்ந்த ஒரு கணத்தில்
சிரித்துக்கொண்டே
மறுபடியும்
மழையில் இறங்கி நடந்து போகிறாள்
புறப்பாடு
அந்தி கூடியதும்
நல்ல வெந்நீரில் குளிக்கிறாள்
தலையை அவ்வளவு நேர்த்தியாக
வாரிக்கொள்கிறாள்
ஆழ்ந்த லயிப்புடன் ஒப்பனையிட்டு
முகத்தை திருத்தமாக நேர் செய்கிறாள்
முக்கியமான தினங்களில்
மனமுவந்து ஏற்கும் ஆடையையே
மீண்டும் தேர்வு செய்கிறாள்
அவளது மன நிலையினை
சற்றே இடம் மாற்றும்
அந்த வாசனை திரவியத்தை
தெளித்துக் கொள்கிறாள்
ஆபரணங்களைக் கவனமாக
அணிந்துகொள்கிறாள்
சமையலறையில் அடுப்பை அணைத்துவிட்டோமா
எலலாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டோமா
என்று சரிபார்த்துக்கொள்கிறாள்
பிறகு
கண்ணாடியில் சற்றே
தன்னை உற்றுப் பார்க்கிறாள்
அவளை
அவளுக்கு
அவ்வளவு பிடித்திருக்கிறது
இனி
அவள் செய்வதற்கு
அங்கே ஒன்றுமே இல்லை
எல்லாம் செய்யப்பட்டு விட்டது
எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டுவிட்டது
நேரமாகிவிட்டதா என
கடிகாரத்தைப் பதற்றத்துடன் பார்த்தபடி
காலணிகளைத் தேடுகிறாள்
சட்டென ஒரு கணம்
எதையோ நினைக்கிறாள்
அலமாரியைத் திறந்து
ஒரு சிறிய மாத்திரையை எடுக்கிறாள்
படுக்கைக்குச் சென்று
அமைதியாக நித்திரையில்
ஆழ்கிறாள்
ஒரு பாதை, ஒரு பிரார்த்தனை
இருப்பதிலேயே
கடினமான பாதையைத்
தேர்வு செய்கிறேன்
இந்தப் பயணம் எந்தவிதத்திலும்
இலகுவாகிவிடக் கூடாது என்பதற்காக
கண்ணீர் மல்க
பிரார்த்தனை செய்கிறேன்
இவ்வளவு பிரயாசையுடன்
உன்னைத் தேடி வரும் நாளில்
நீ அங்கே இருக்கக் கூடாது என்பதற்காக
வேறெப்படியும்
நான் அனாவசியமாக
ஒரு வெறுப்பைக் காட்டுகிறேன்
சம்பந்தமில்லாமல்
ஒரு உதாசீனத்தைக் காட்டுகிறேன்
வேறெப்படியும்
இந்த இடத்தைவிட்டுப்
போக முடியாது
சார்தல்
எனக்கு
வேண்டியதனைத்தையும்
நானே
ஒழுங்குபடுத்திக் கொள்கிறேன்
இந்த மாத்திரைகளை மட்டும்
யாராவது
எடுத்துத் தரவேண்டும்
இனி
யாரையும்
விரும்பவில்லை
இனி
யாரோடும்
இருக்கலாம்
அறியும் வழி
உன்னைப் பற்றிக் கொள்ளவே
முடியாதென
புரிந்த நாளில்தான்
எனக்குத் தெரிந்தது
இவ்வளவு நாளும்
உன்னை
எவ்வளவு
பற்றிக்கொண்டிருந்தேன்
என்பது
இழக்கவே முடியாதது
எதுவெனத் தெரிந்துகொள்ள
அதை
இவ்வளவு
இழக்க வேண்டுமா?
யாருக்குமே
இவ்வளவு
அழகாக இருந்தால்
யாருக்குமே
வெறுக்கத்தான் தோன்றும்
திரும்பும்போதும்
நீண்ட படிக்கட்டுகளில்
இறங்கிச் செல்கிறேன்
நான் வரும்போது
இங்கே
இத்தனை படிகள்
இருக்கவே இல்லை
இப்போதுதான் தெரியும்
இந்தப் பின்னிரவில்
இத்தனை தனியாக
வீடு திரும்பும்போதுதான்
தெரிகிறது
என்னைப் பற்றி
நினைத்துக் கொள்ள
எனக்கு
இவ்வளவு
இருக்கிறது என்று
நடனம் மூன்று குறிப்புகள்
1
நடனமாடுபவர்களுக்கும்
நடனத்திற்கு கைதட்டுபவர்களுக்கும் இடையே
நடனம்
தனியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது
2
நடன மங்கை
ஆட அழைக்கும் ஒவ்வொரு கரத்தையும்
புன்னகையுடன் மறுதலிக்கிறாள்
பிறகு நடனத்தை தொடர்கிறாள்
அங்கே இல்லவே இல்லாத
யாரோ ஒருவருடன்
3
மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறோம்
நமக்கு நடனமாடத் தெரியாது என்று சொல்ல
அங்கே யாருமே இல்லை
தேடல்
தவறாக அழைக்கப்பட்ட
தொலைபேசி எண்ணின்
மறுமுனையிலிருந்து
யாரோ ஒரு குழந்தை
அப்பா நீ எங்கேயிருக்கிறாய்
என திரும்பத் திரும்ப
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
நான்
அதன் அப்பா இல்லை
என சொல்லி முடிப்பதற்குள்
என் வீடுவரை
தேடி வந்துவிட்டது
கடைசியாக
ஒரு அன்பில்
கடைசியாக மிஞ்சுகிறது
ஒரு அன்பின் சின்னம்
மட்டும்
தடயம்
ஒரு அன்னிய இடத்தைப்
பயன்படுத்தும்போது
எல்லாவற்றையும்
நேர்த்தியாக கையாள்கிறோம்
எந்த சந்தேகமும் வராதபடி
எல்லாவற்றையும்
அதனதன் இடத்தில்
மறுபடி வைக்கிறோம்
ஒரு
ஈரத் துண்டை
என்ன செய்வதென்று மட்டும்
ஒருபோதும் தெரிவதில்லை
காலியிடங்கள்
பறவைகள் இறந்த பிறகு
காலி பறவைக் கூண்டுகள்
மீன்கள் இறந்த பிறகு
காலி மீன் தொட்டிகள்
வளர்ப்பு நாய்கள் இறந்த பிறகு
காலி நாய்ச் சங்கிலிகள்
தொட்டிச்செடிகள் அழுகிய பிறகு
காலித்தொட்டிகள்
மனிதர்கள் இறந்து போகிறார்கள்
மற்றெதையும் போல
அவ்வளவு தெளிவாக
இருப்பதில்லை
அது
வேறெப்போதும்
தனது முதல் பல் விழுவதை
உற்றுப் பார்க்கும் சிறுவன்
தனது ருதுவின் முதல் குருதியை
உக்கிரமாய் உணரும் சிறுமி
தனது முதல் நரையை பிடுங்கும்
ஒரு மனிதன்
தனது முதல் காதலை இழக்கும்
ஒரு தருணம்
வேறெப்போதும் அறியவில்லை
அவ்வளவு தூய தனிமையை
பரஸ்பரம்
பண்டிகைக்கு முதல் நாள்
குழந்தைக்கு புத்தாடை வாங்க
பணம் கேட்பவன்
குழந்தைக்கு உடல் நலமில்லை
எனப் பொய் சொல்கிறான்
கடவுள் அவனை
கொஞ்சம் மன்னிக்கிறார்
அவனும் கடவுளை
கொஞ்சம் மன்னிக்கிறான்
ஒன்றும் நிகழவில்லை
பண்டிகைகள் வந்து
பண்டிகைகள் போகின்றன
அதே இடத்தில்
அப்படியேதான்
இருந்துகொண்டிருக்கிறேன்
முதல் நினைவு
முதல்நாள் பள்ளிக்குப்
போகும் குழந்தை
எப்போது வீட்டுக்குப் போவோம்
என்பதையே
பனித்த கண்களுடன்
நினைத்துக்கொண்டிருக்கிறது
பிறகு
கற்றுக்கொண்ட அனைத்தையும்
அது மறந்துவிடுகிறது
வாழ்நாள் முழுக்க
இந்த ஒரு பழக்கத்தைத் தவிர
சாம்பல் நிறத் துயில்
அதிகாலையில்
பணியிலிருந்து திரும்பும் நங்கை
ஒரு சாம்பல் நிறப்
பொழுதினைப் பார்க்கிறாள்
ஒரு தேநீர்க் கோப்பையின்
சாம்பல் நிற ஆவியிலிருந்து
பிறக்கும் ஒரு உலகினைப் பார்க்கிறாள்
ஒரு பகலின் நொடியினைவிட
ஒரு இரவின் நொடி புதிர் மிகுந்தது
எங்கெங்கும்
ஏதோ ஒன்று துவங்குகையில்
எல்லாவற்றையும்
முடித்து வைப்பதற்கு மனமில்லாமல்
சாலையோரம் உதிர்ந்துகிடக்கும்
ஏதோ மலரைக் கையில் எடுக்கிறாள்
அது தன்னுடைய நாளின் மலரல்ல
என்று புன்னகையுடன்
திரும்ப வைக்கிறாள்
ஒரு பகலின் சாத்தியங்களைவிட
ஒரு இரவின் சாத்தியங்கள்
எல்லையற்றவை
எந்த ஒரு பகலையும்விட
ஒரு தூக்கமற்ற இரவு
அவளது புலன்களைப்
பிரகாசிக்க வைக்கிறது
புலர்ந்து வரும் பொழுதின்
ஒவ்வொரு கண் விழிப்பிற்கும்
ஒவ்வொரு மணியோசைக்கும்
தலை வணங்குகிறாள்
அவை வேறொரு உலகின் அழைப்பு
என்றுணரும்போது திடுக்கிடுகிறாள்
ஒரு பகலின் நினைவுகளைவிட
ஒரு இரவின் நினைவுகள்
கருணையற்றவை
சூரியனின் ஒரு கிரணத்தில் தொடங்கி
இன்னொரு கிரணத்தில் முடியும்
ஒரு வாழ்க்கையின்
புராதன சுழற்சியிலிருந்து
முற்றாக நீங்குகிறாள்
அது அவளது உடலை
எடையற்றதாக மாற்றுகிறது
அவளது மெல்லிய இமைகளைக்
கனத்துப்போகச் செய்கிறது
ஒரு பகலின் குரல் கேட்பதேயில்லை
ஒரு இரவின் குரலை மௌனமாக்கவே முடிவதில்லை
அணைத்துக் கொள்ள வேண்டும்
என்று விரும்புகிறாள்
தனியே
அதிகாலையின்
சாம்பல் நிறத் துயிலில்
வீழ்கிறாள்
ஆழமாக
வெகு ஆழமாக
ஒரு சாம்பல் நிறக் கனவு
காண்கிறாள்
ஒரு பகல் என்பது
ஒரு வேலை நேரம்
ஒரு இரவு என்பது
இன்னொரு வேலை நேரம்
அகல்
கார்த்திகை நாளில்
சின்னஞ் சிறுமகள்
ஒவ்வொரு அகல் விளக்காகத்
துடைத்து வைக்கிறாள்
என் இறந்த காலத்திற்கு
இனி நான் ஒருபோதும்
திரும்ப மாட்டேன்
-மனுஷ்ய புத்திரன்-
Thursday, February 24, 2011
Social networks, social revolution: Youtube, Facebook and Twitter have become the new weapons of mass mobilisation
Information is power, but 21st century technology has unleashed an information revolution, and now the genie is out of the bottle.
Youtube, Facebook and Twitter have become the new weapons of mass mobilisation; geeks have taken on dictators; bloggers are dissidents; and social networks have become rallying forces for social justice.
As people around the world challenge authorities, from Iran to Tunisia, Egypt to Yemen, entire societies are being transformed as ordinary citizens see the difference, imagine the alternative, and come together to organise for a better future.
So, are social networks triggering social revolution? And where will the next domino fall?
http://english.aljazeera.net/programmes/empire/2011/02/201121614532116986.html
Subscribe to:
Posts (Atom)